பகுப்பு: நூல்கள்
-
கோவையில் மக்கள் தீர்ப்பாய ஆவணம் வெளியீடு!

வெல்ஃபேர் கட்சியின் முன்னெடுப்பில்ஊபா(UAPA) சட்டத்தின் கீழ் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளவர்களின் குடும்பத்தினர் மற்றும் பல்வேறு சமூக, அரசியல் செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்ட மக்கள் தீர்ப்பாயத்தின் ஆவண வெளியீடு கோவையில் 04.01.2026 அன்று நடைபெற்றது. நிகழ்வில் ஊபா சிறைவாசிகளின் குடும்பத்தினர் தங்களது துயரங்களை பகிர்ந்து கொண்டனர்.மனிதநேய மக்கள் கட்சி, இந்திய தவ்ஹீத் ஜமாத், SDPI கட்சி, வெல்ஃபேர் கட்சியின் நிருவாகிகள் மற்றும் பி.யூ.சி.எல் அமைப்பைச் சார்ந்த வழக்கறிஞர் ச.பாலமுருகன் உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர்.
-
காவிரிப் பெருநிலம் நூல் வெளியீடு

தலைக்காவிரி முதல் பூம்புகார் வரையிலான தனது பயண அனுபவங்களை வழக்குரைஞர் ஆ.விஜய் நூலாக்கியுள்ளார்.காரா பதிப்பகம் நூலை பதிப்பித்துள்ளனர். இந்நூல் வெளியீட்டு நிகழ்வு ஈரோட்டில் 03.01.2026 அன்று நடைபெற்றது.நூலை திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான தி.வேல்முருகன் அவர்கள் வெளியிட இலங்கை வடமாகாண சபை முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் பெற்றுக் கொண்டார். வழக்குரைஞர் செயப்பிரகாசம் (புரட்சிகர இளைஞர் முன்னணி) அவர்கள் அறிமுக உரை நிகழ்த்தினார்.…
