சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக 3 இஸ்லாமிய மருத்துவர்கள் உள்ளிட்ட நால்வர் தேசிய புலனாய்வு முகமையால்(என்.ஐ.ஏ) கைது செய்யப்பட்டனர். ஆனால் நேற்று இந்நால்வரும் குண்டுவெடிப்பில் தொடர்பற்றவர்கள் எனக் கூறி என்.ஐ.ஏ இவர்களை விடுவித்தது.
ஆனால் இவர்களை கைது செய்தவுடனேயே ஊடகங்கள் மீடியா ட்ரெயல் எனுப்படும் ஊடக வழக்கு விசாரணையை தொடங்கிவிட்டன. கைதானவர்களை மையப்படுத்தியும் அல்-ஃபலாஹ் கல்வி நிலையத்தைக் குறிவைத்தும் செய்தி ஊடகங்கள் பல்வேறு கட்டுக்கதைகளையும், புனைவுகளையும் கட்டமைக்கத் தொடங்கிவிட்டன. ஆனால் இந்த நால்வரும் விடுதலை செய்யப்பட்டது குறித்தோ இவர்களுக்கும் இந்த குண்டுவெடிப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என எந்த ஊடகங்களும் வாய்திறக்கவில்லை. ஏனெனில் அனைத்து ஊடகங்களும் அவ்வளவு புனைவுகளை இவர்கள் மீது கட்டமைத்து வைத்துள்ளன.
வணக்கத்திற்குரியவன் இறைவன் ஒருவனே என இவர்கள் கூறுவது தான் ஒரு கூட்டத்தை இன்றும் அச்சத்திற்குள்ளாக்கி வருகிறது.


பின்னூட்டமொன்றை இடுக